புதுச்சேரி, ஜூலை 3- புதுச்சேரியில் ஐடி பூங்கா துவக்க அமைச்சர் நமச்சிவாயம் ஹைதராபாத் ஹைடெக் சிட்டியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். புதுச்சேரியில் புதிய ஐடி பூங்கா துவங்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருந்தார். அதன்படி ஐதராபாத் ஹைடெக் சிட்டியில் உள்ள மைண்ட் ஸ்பேஸ் ஐடி பூங்காவை அமைச்சர் நமச்சிவாயம் புதனன்று ஐடி பார்க் தலைமை இயக்க அதிகாரி ஸ்ரீ ஷ்ரவன் குமார் கோன் சந்தித்து பேசினார். மைண்ட்ஸ்பேஸ் ஐடி பார்க் திட்ட அமலாக்கம் மற்றும் செயல்பாட்டு மாதிரி குறித்து அமைச்சரிடம் எடுத்துரைத்தார். இச்சந்திப்பின் போது தொழில்துறை செயலாளர் ஜவஹர், ஐ.டி. துறையின் இயக்குநர் ருத்ர கவுடு ஆகியோர் உடன் இருந்தனர்.