சென்னை, மார்ச் 14 - சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் பஸ் நிலையம், ரயில் நிலையம் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த பகுதியில் ரூ.234.37 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்தது. செங்கல்பட்டு-சென்னை பாலப்பகுதி, சீனிவாசநகர் பாலப்பகுதி, சென்னை-செங்கல்பட்டு பாலப்பகுதி, கிழக்கு புறவழிச்சாலை பாலப்பகுதி என 4 வகையாக பிரிக்கப்பட்டு இந்த பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தாங்கு தூண்கள், ஓடுதளம், அணுகுசாலை தாங்கு சுவர்கள் என பல்வேறு பணிகள் பாதிக்கு மேல் முடிவடைந்து விட்டன. இந்த நிலையில் இந்த பாலப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஞாயிறன்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.