districts

img

கிள்ளையில் இருளர் - மீனவ மக்களுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் வழங்கினார்

சிதம்பரம், செப். 17- சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சி பகுதி யில் வசித்து வந்த இருளர் மற்றும் மீனவ மக்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியின்போது 147 பேர் வீடுகளை இழந்தனர். அப்போது, தனியார் தொண்டு நிறுவனம் அந்த மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது. ஆனால் பட்டா இல்லாமல் அந்த வீடுகளில் வசித்து வந்தனர் இதையடுத்து, வருவாய் துறையினரிடம் பட்டா கேட்டு விண்ணப்பித்தனர். இந்நிலையில், கிள்ளையில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூ ராட்சி துணைத் தலைவர்  ரவீந்திரன் தலைமை தாங்கி னார். வேளாண் மற்றும் உழ வர் நலத்துறைஅமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு 147 பயனாளிகளுக்கு வீடு மனை பட்டா மற்றும் 10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் ஊராட்சிகளில் குப்பை களை அகற்றும் பேட்டரி யால் இயங்கும் வாக னத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட வருவாய் அலுவலர்,  பரங்கிப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி, கிள்ளை பேரூ ராட்சி மன்ற தலைவர் மல்லிகா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.