districts

img

மழை பாதிப்பு: அம்பத்தூரில் அமைச்சர், எம்எல்ஏ ஆய்வு

அம்பத்தூர், டிச. 8- அம்பத்தூர் தொகுதி யில் மழையால் பாதிக்கப் பட்ட இடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ ஆகி யோர் வியாழனன்று (டிச.7) பார்வையிட்டு ஆய்வு  செய்து, நிவாரணப் பொருட் களை வழங்கினர். மிக்ஜம் புயலால் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த 580 மி.மீ. அதி கனமழையால் அம்பத்தூர் சலவையாளர் நகர், கருக்கு  மின்சார வாரிய காலனி, கொரட்டூரில் வீட்டு வசதி குடி யிருப்பு, வடக்கு கொரட்டூர்  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. அதேபோல் சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற் பேட்டையில் உள்ள தொழிற் சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியா மல் முடங்கினர். இந்நிலையில் மழை யால் பாதிக்கப்பட்ட பகுதி களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமு வேல், மண்டலக்குழு தலை வர் பி.கே.மூர்த்தி ஆகியோர்  பார்வையிட்டு ஆய்வு  செய்தனர். அப்போது அம்பத்தூர் தொழிற் பேட்டை, கொரட்டூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தர விட்டனர். பின்னர் பொதுப் பணித்துறை, சென்னை மாநகராட்சி, சிட்கோ நிர்வா கம் ஆகிய துறைகளின் அதிகாரிகளை ஒருங்கி ணைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது அவர் அம்பத்தூர் தொகுதி முழுவதும் போர்க்கால அடிப்படையில் வெள்ள  நீரை அகற்ற நடவடிக்கை  எடுக்குமாறு வலியுறுத்தி னார். குறிப்பாக கொரட்டூரில்  வீட்டு வசதி வாரிய குடி யிருப்பு பகுதியில் தேங்கி யுள்ள மழைநீரை அப்புறப் படுத்தி மின் விநியோகம் வழங்க உத்தரவிட்டார். பின்னர் அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் ஏற்பாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரிசி, போர்வை, பிரட், பிஸ்கட், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.