திருக்கோவிலூர், ஜூன் 16- தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் மணம்பூண்டி, ஜம்பை - பள்ளிச் சந்தல், திருவரங்கம் ஆகிய கிராமங்களில் செயல்பட்டுவரும் பகுதி நேர நூலகங்களில் 9 ஆம் ஆண்டு தொடக்கவிழா வாசகர் வட்டக்குழுத் தலைவர் கவிமாமணி சிங்கார உதியன் தலைமையில் நடைபெற்றது. பணி நிறைவு பெற்ற ராணுவ வீரர் கு.கல்யாணகுமார், வர்த்தகர் சங்கத் தலைவர் அம்மு ரவி, அரிமா சங்க மாவட்டத் தலைவர் ம.ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் மு.சாந்தி வரவேற்றுப் பேசினார். திருக்கோவலூர் நல்நூலகர் மு.அன்பழகனிடம் மணம்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் ல.தயாளன் ரூ.2000 செலுத்தி நூறு மாண வர்களை உறுப்பினர்களாகவும் ரூபாய் 1000 செலுத்தி தன்னை ஒரு புரவலராகவும் இணைத்துக் கொண்டார். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.நெடுஞ்செழியன், தலைமையாசிரியர் ஆ.அமுதா, ஆசிரியர்கள் டி.ஷீலா, ப.கீதா புஷ்பா ஆகியோர் தலா ரூபாய் 1000 செலுத்தி புரவலர்களாகவும் இணைந்தனர். ஜம்பை- பள்ளிச்சந்தல் நூலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா துரை சாமி ரூ. 4000 செலுத்தி மாணவர்களை உறுப்பினர்களாக இணைத்தார். திருவரங்கம் நூலகத்தில் கிராம தலைமைச் செவிலியர் சே.ரேகா ரமேஷ் 50 மாணவர்களை உறுப்பினர்க ளாக இணைத்தார். மணலூர்ப்பேட்டை கிளை நூலகத்தில் காணை ஜெ. ஜெயலட்சுமி ரூ. 2750 25 மாணவர்களை குடும்ப உறுப்பினர்களாகவும் இணைத்தார். ஊராட்சி மன்ற உறுப்பினர் சீனு வாசன், சமூகசேவகர் ப.ரவி, திரு மலை, செல்வகணபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நூலக பணியாளர்கள் மு.கோவிந்தன், ச.தேவி, சந்தியா, கு.வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.