கடலூர்,டிச.28- கடலூரில் நடைபெற்ற தேசிய அளவி லான சிலம்பம் போட்டி கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் தொடங்கி வைத்தார். தேசிய சிலம்பம் கூட்டமைப்பு, உலக ளாவிய சிலம்பம் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு பாரம்பரிய சிலம்பம் அசோசி யேசன் சார்பில் இரண்டாவது தேசிய அளவிலான சிலம்பம் விளையாட்டுப் போட்டி கடலூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியை கடலூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தேசிய தலைவர் சந்தோஷ் குமார், மாவட்டத் தலைவர் சாய் கிருஷ்ணா, செயலாளர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் எஸ்.கே.தேவநாதன் வரவேற்றார். தொடர்ந்து அனைத்து குடியிரு ப்போர் இயக்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன், தலைவர்பாலு பச்சையப்பன், பொருளாளர் பி.வி.கே.ரமணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதையடுத்து தொடுமுறை, ஒத்த கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, சுருள்வால் உள்ளிட்ட பிரிவுகளில் சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 5 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சுதாகர், மூத்த தடகள வீரர் பரமசிவம், மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன், ஓய்வூதியர்கள் சங்க தலைவர் டி.புருஷோத்தமன், ஆலோசகர் மோகன் குமார், கவுரவத் தலைவர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.