திருவண்ணாமலை, ஏப்.7- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அம்பேத்கர் சிலை அருகே, திருவண்ணா மலை மக்களவை தொகுதியில் போட்டியி டும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணா துரையை ஆதரித்து சிபிஎம் சார்பில், பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி பேசியபோது, கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, கொரோனாவின் கொடூரத்தால் மக்கள் துயரூற்று இருந்தனர். தடுப்பூசி ஒன்றே அதற்கு தீர்வு என்று உலகமே நம்பிய போதும் கூட, பிரதமரோ, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரோ, தமிழகத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியோ, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ யாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. குலைநடுங்கிப் போயிருந்தனர். இந்த நேரத்தில் பதவியேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அரசு கடுமையான நெருக்கடி கொடுத்தது, இருப்பினும் தடுப்பு மருந்துகள் பெற்று தமிழக மக்களுக்கு விநியோகம் செய்தது. திமுகவின் வாக்குறுதிகள் பெருமளவு நிறைவேற்றப்பட்டுள்ளது. செங்கம் சட்ட மன்ற தொகுதியில், நகரம் மற்றும் கிராம சாலைகள், கோயில் புனரமைப்பு, சிப்காட் திட்டம், பொது மருத்துவமனை சேவை, தடுப்பணைகள், பாலங்கள், மின்விளக்குகள் என, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மக்களவை உறுப்பினர் சி. என். அண்ணாதுரை ஆகியோரின் உதவியுடன், கடந்த இரண்டு ஆண்டுகளில், 650 கோடி ரூபாய் மதிப்பிலான மக்கள் நல பணிகள் செங்கம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். சுங்கச்சாவடி தூக்கி எறியப்படும் மாவட்டச் செயலாளர் எம் சிவக்குமார் பேசியபோது தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் முறைகேடாக செயல்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் தூக்கி எறியப்படுவது உறுதி என்றார்.