districts

மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லிசை நிகழச்சி

சென்னை,ஜூலை 22- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா மற்றும் தமிழ்  கலாச்சாரம் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு  பகுதியாக ரயில் நிலையங்க ளில்  மெல்லிசை கலை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. ஆன் தி ஸ்டீரிட் ஆப்  சென்னை கலை குழுவின ருடன் இணைந்து  நடை பெறவுள்ள இந்த நிகழ்ச்சி கள் வரும் 23ஆம்  தேதி உயர் நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 30ஆம் தேதி விமான நிலையம்-விம்கோ நகர் பணிமனை மெட்ரோ  ரயில் நிலையங்களில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், ஆகஸ்டு 6ஆம் தேதி கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 13ஆம் தேதி திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி  வரையும், 20-ந் தேதி அறிஞர்  அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில்  மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 27-ந் தேதி   எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடக்கிறது. சென்னை மாநகரில் வசிக்கும் மெட்ரோ ரயில்  பயணிகள் மற்றும் பொது மக்கள் மெட்ரோ ரயில்  நிலையங்களில் நடை பெறும் இசை மற்றும்  பல்வேறு கலை நிகழ்ச்சி களை கண்டுகளிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில்  நிறுவனம் தெரிவித்துள்ளது.