districts

img

மருத்துவ முகாம்

சென்னை விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்த போராட்டத்தில் முன்னின்ற சி.கருப்பையன் நினைவாக புதனன்று (மே 25) பொழிச்சலூரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதிக்குழு, ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி, நகர்ப்புற சுகாதார மையம் மற்றும் மாஸ் ரத்த பரிசோதனை நிலையம் இணைந்து இந்த முகாமை நடத்தின. சிபிஎம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற முகாமை கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் தொடங்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.அரிகிருஷ்ணன், எம்.தாமோதரன், எஸ்.ஜெயசங்கரன் உள்ளிட்டோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.