districts

img

திடீர் நகரில் மேயர், ஆணையர் ஆய்வு

சென்னை, ஜூலை 21 - ஓட்டேரி சுடுகாட்டை ஒட்டியுள்ள திடீர் நகர் குடிசைப் பகுதியை சென்னை மாநகராட்சி மேயர், ஆணையர் அடுத் தடுத்து பார்வையிட்டு ஆய்வு  செய்தனர். எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி சுடுகாட்டையொட்டி திடீர் நகர் உள்ளது. தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இப்பகுதியில் சுமார் 700 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் போதிய அளவு இல்லை. இதனால்  சுகாதாரமற்ற சூழலில் மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். எனவே, இந்த பகுதி மக்க ளுக்கு தமிழ்நாடு நகர்ப் புற வாழ்விட மேம்பாட்டு  வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு களை கட்டித் தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் இயக்கம் நடத்தி வருகிறது. மே மாதம்  கையெழுத்து இயக்கம் நடத்தி சட்டமன்ற உறுப்பி னர், 99வது வட்ட மாமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தது. இதன் தொடர்ச்சியாக ஜூலை 18 அன்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத் தலைவர் கோவிந்த ராவை மார்க்சிஸ்ட் கட்சி யின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, எழும்பூர் பகுதி செயலாளர் கே.முருகன் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்து பேசினர். இதனையடுத்து ஜூலை  19, 20 தேதிகளில் மாநகரட்சி  மேயர் ஆர்.பிரியா, ஆணை யர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் அடுத்தடுத்த நாளில் திடீர் நகர் பகுதிக்கு  சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சிபிஎம் தலை வர்கள் புகழேந்தி, தட்சிணா மூர்த்தி உள்ளிட்டோர் அங்குள்ள நிலைமைகளை விளக்கி கூறினர்.