districts

img

திருவண்ணாமலையில் மே தினப் பேரணி

திருவண்ணாமலையில் அண்ணா சிலை அருகே மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே. காங்கேயன் தலைமை தாங்கினார், சிஐடியு மாநில துணைச் செயலாளர் சி. நாகராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் இரா. பாரி, மாவட்டப் பொருளாளர் எஸ். முரளி, மாவட்ட துணைத் தலைவர்கள் எம்.வீரபத்திரன், வி.சங்கர்,பி.கணபதி, கே.நாகராஜன்,   துணைச் செயலாளர்கள்எம்.பலாஜி, ஏ.சேகர், ஆர்.கமலக்கண்ணன், எம்.பார்வதி உள்ளிட்ட பலர் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக,  காமராஜர் சிலையில் இருந்து அண்ணா சிலை வரை நடைபெற்ற பேரணியில்,  ஏராளமான ஆட்டோக்கள் அணிவகுத்து வந்தன. இந்த பேரணிக்கு மாவட்ட துணைச் செயலாளர் கே. சரவணன் தலைமை தாங்கினார்.