சென்னை, மே 25 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மயிலாப்பூர் பகுதி 16வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு பகுதித் தலைவர் எம்.காந்தி லட்சுமி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ.ஜூலியட், சென்னை மாநகராட்சி 123வது வட்ட உறுப்பினர் எம்.சரஸ்வதி உள்ளிட்டோர் பேசினர். பகுதி தலைவராக யசோதா, செயலாளராக செல்வி, காந்தி லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரவாயல் மதுரவாயில் பகுதி 14வது மாநாடு மேற்கு முகப்பேரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு பகுதித்தலைவர் எஸ்.பிச்சையம்மாள் தலைமை தாங்கினார். சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் பிரமிளா, மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ.ஜூலியட், பகுதிச் செயலாளர் எஸ்.சரவணசெல்வி, சென்னை மாநகராட்சி 91வது வட்ட உறுப்பினர் மாலினி, மருத்துவர் கவிதா உள்ளிட்டோர் பேசினர். பகுதி தலைவர் பி. கவிதா, செயலாளர் எஸ். சித்ரா, பொருளாளர் எஸ். விஜயலஷ்மி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.