திருப்பத்தூர், ஜன. 21- திருப்பத்தூர் மாவட்டம் வாணிய ம்பாடி அருகே மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஏழைப் தனித் பெண் சங்கீதா (35). சமீபத்தில் தென்காசியில் நடை பெற்ற தென்னிந்திய அளவிலான உடல் கட்டழகு போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். அவரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.டி.சங்கரி, வேலூர் மாவட்டத் தலைவர் ஆண்டாள், மாவட்டச் செயலாளர் இந்துமதி ஆகியோர் வேலூர் மாவட்டக்குழு சார்பில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் எஸ்.டி.சங்கரி கூறுகையில், “ பொதுவாக ஆண்கள்தான் இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள். ஆனால், ஒரு பெண் பங்கேற்று வெற்றி பெற்று தங்கம் வெல்வது மிகப்பெரிய சாதனை” என்றார். இதுபோன்று சாதனை புரியத் துடிக்கும் பெண்களை அரசு ஊக்கு விக்க வேண்டும். சங்கீதாவிற்கு வசிப்பதற்கு ஒரு வீடும், பத்தாம் வகுப்பு முடித்திருக்கும் அவருக்கு அரசு வேலையும், அவரது பிள்ளைகள் மேல் படிப்பிற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர்.