districts

img

மாதர் சங்க தலைவர் எஸ்.செல்வி காலமானார்

சென்னை, டிச. 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆழ்வார் பேட்டை கிளை உறுப்பி னரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மயிலாப்பூர் பகுதிச் செயலாளருமான தோழர் எஸ்.செல்வி வியாழனன்று (டிச.7) உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 50. ஆழ்வார் பேட்டை பெண்கள் கிளைச் செயலாளராகவும், மாதர் சங்கத்தின் ஆயிரம் விளக்கு பகுதி செயலாளராகவும் முன்பு செயல்பட்டார். தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், ஜி.செந்தில்குமார், மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் தீ.சந்துரு, எம்.சரஸ்வதி எம்.சி., ஆழ்வார்பேட்டை கிளைச் செயலாளர் நித்யானந்தம், மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, மாநில பொருளாளர் வ.பிரமிளா, தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவண செல்வி, செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ. ஜூலியட், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் வி.தன லட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் மயிலாப்பூர் மயா னத்தில் தகனம் செய்யப்பட்டது.