சாதாரண ஏழை எளிய மக்களை பாதிக்கும் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குடியாத்தம் நகரம் 36ஆவது வார்டு மற்றும் புவனேஸ்வரி பேட்டை பகுதியில் இன்பவள்ளி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் எஸ்டி.சங்கரி, பொருளாளர் எ.அஞ்சலி, நகரக் குழு உறுப்பினர் எஸ்.கவுரி, வாலிபர் சங்க நகரச் செயலாளர் எஸ்.வாசுதேவன், தலைவர் பி.ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.