districts

img

யானை வழிதடத்தில் நள்ளிரவில் அரசு மருத்துவர் நடைபயணம்

கிருஷ்ணகிரி,டிச 29-   தேன்கனிக்கட்டை வட்டம் கெலமங்கலத்தில் பேருந்து நிலைய சாலையில்  மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட கிராம சுகாதார நிலையம் 2006 ல் ஆரம்ப சுகாதார நிலையமாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  வட்டார ஆரம்ப சுகாதார நிலையமாக தரம்  உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் சுற்றுவட்டாரத்தில் 28 க்கும்  மேற்பட்ட ஊராட்சிகள் 48 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை சேர்ந்த   சுமார் ஒரு லட்சம் பேர் பயனடையும் வகையில் உள்ள இந்த சுகாதார நிலையத்தில்  ஐந்து மருத்துவர்கள்,  2 செவிலியர்கள்  மட்டுமே நிரந்தரமாக உள்ளனர்.  2019 முதல் தலைமை மருத்துவர் ராஜேஷ் குமார் தலைமையில் சராசரி யாக மாதத்திற்கு 35 லிருந்து 45 வரை பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 45 பிரசவங்கள், 67 குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.  தினமும் 300 முதல் 400 பேர் வரை பொதுமக்கள் மருத்துவத்திற்கு வந்து செல்கின்றனர். ஓராண்டுக்கு முன்பு ராஜேஷ் குமார் தலைமையில் 300 கர்ப்பினிகளுக்கு இலவச வளைகாப்பு நடத்தப்பட்டது.  பெட்டமுகிலாளம் பகுதியில் மலைவாழ் மக்களுக்கு இரு முறை சிறப்பு மருத்துவ முகாம்களும் பல முறை கொரோனா  தொற்று தடுப்பூசி  முகாம்களும்  நடத்தப்பட்டு பெரும்பான் மையினருக்கு தடுப்பூசி போடப்பட் டுள்ளது. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆரம்ப சுகாதார  நிலையங்களின் பட்டியலில் கெலமங்க லம் மையமும் இடம்பெற்றுள்ளது.    மருத்துவம், தடுப்பூசி, மற்றும் சிகிச்சை களுக்கு 2019 முதல் மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துக் குழுவினர் 10 கிலோ மீட்டர் தூரம் வரை மலை மீது நடந்தே சென்று மலைவாழ் மக்களுக்கு மருத்துவம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட கடமகுட்டை கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி முனியப்பனின் 26 வயது மனைவி மத்தூரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவவலி ஏற்பட்டுள்ளது. வீட்டி லேயே குழந்தை பிறந்த நிலையில் மத்தூரிக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கெலமங்க லம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமாருக்கு இரவு 10 மணிக்கு  தகவல் தெரிவித்தனர். தனது மருத்துவ குழுவினருடன் உடனடியாக அங்கு வருவதாகவும்,  அந்தப் பெண்ணை மலையின் கீழ்  தொட்டில்கட்டி கொண்டு வாருங்கள் என்றும் தெரிவித்தார். இந்த கிராமத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 40  வீடுகளில் 180க்கும் மேல் வசிக்கின்ற னர். சாலை வசதி உட்பட எதுவும் இல்லாத பல கிராமங்கள் சூழ்ந்த  மலைப்பகுதியில் 3 கிலோமீட்டர் மிகவும் கரடுமுரடான பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் மருத்துவர் ராஜேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் ரங்கநாதன், செவிலியர் மாலாஸ்ரீ ,சோபியா, 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அனிதா, ஆகியோர் கொட்டும் பனியில் யானைகள் உலவும் வனப்பகுதியில்  மலையடிவாரத்திற்கு இரவு 12 மணிக்கு சென்றனர்.அப்போது மத்தூரி, அவர் உறவினர்கள் யாரும் அங்கு இல்லை. செல்போன் சிக்னலும் கிடைக்காத நிலையில்  தாமதம் ஏற்பட்டால் மருத் துவம் இல்லாமல் கர்ப்பினி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் அவர்கள் வருவதற்கு காத்திருக்காமல் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம்  டார்ச் லைட் உதவி யுடன் நடந்து சென்றபோது  கர்ப்பிணி பெண் மத்தூரியை அவரது உறவினர் கள்  தூளியில் தூக்கி வந்த நிலையில் நடுக்காட்டில் அங்கேயே படுக்க வைத்து  முதலுதவி சிகிச்சை அளித்தார் மருத்து வர் ராஜேஷ்.  பின்னர் ஆம்பூலன்சில்   தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தாயும் சேயும் காப்பாற்றப்பட்டனர்.

மருத்துவருக்கு பாராட்டு

கொட்டும் பனி, யானைகள் சகஜமாக உலவும் அடர்ந்த காட்டின் மலை அடிவாரம் கரடுமுரடான சாலை யில் நடு இரவில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் மலை கிராமத்து பெண் மத்தூரி சிசு ஆகியோர் உயிர்  காக்க மருத்துவம் பார்த்த  மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் மற்றும் குழுவினரின் உயிர்காக்கும் சேவையை அறிந்து மலை கிராம மக்கள் நெஞ்சார வாழ்த்தினர். செய்தியறிந்து நாடே பாராட்டி வருகிறது.  இந்நிலையில் செய்தியறிந்த மார்க்சிஸ்ட் கட்சி  மாநிலச் செயலாளர் கே பால கிருஷ்ணன், மருத்துவர் ராஜேஷ் குமாரை கைப்பேசியில் உடனடியாக தொடர்பு கொண்டு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மலைப்பகுதிக்கு நடந்தே சென்று  தாய், சேய் இருவர் உயிரையும் காப்பாற்றியதற்காக பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் ராஜேஷ்குமா ருக்கு பாராட்டு கடிதமும் அனுப்பினர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி. சேகர் கட்சி நிர்வாகிகளுடன் கெலமங்கலம் மருத்துவமனைக்கு  சென்று மருத்துவ அலுவலர் ராஜேஷ்கு மார் மற்றும் மருத்துவக் குழுவினரை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.  மகத் தான இந்த சேவை தொடர வேண்டும் என  அவர் கேட்டுக்கொண்டார். மாநில செயலாளர் கே.பாலகிரு ஷ்ணன் பாராட்டு தெரிவித்ததற்கும் மாவட்ட செயலாளர் நேரில பாராட்டி யதற்கும் நன்றி தெரிவித்ததுடன் தங்கள் பாராட்டுகள், ஊக்குவிப்புகள் என்னையும் எங்கள் மருத்துவக் குழு வையும் இன்னும் அதிகமாக மக்க ளுக்கு மருத்துவ சேவை செய்யதிட  ஊக்கப்படுத்தியுள்ளது. இன்னும் சிறப்பாக செயல்படுவோம் என்று  மருத்துவர் ராஜேஷ் கூறினார். இந்த நிகழ்வில்  மார்க்சிஸ்ட் கட்சி யின் கெலமங்கலம் ஒன்றிய செயலா ளர் சீனிவாசன், வாலிபர் சங்க நிர்வாகி கள் ராஜா, சங்கர் உட்பட கலந்து கொண்டனர்.

 - ஒய்.சந்திரன்