districts

img

திரையரங்கு,கடைகளில் முகக்கவசம் கட்டாயம்

சென்னை, ஜூலை 4-  சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க தொடங்கி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் தீவிர  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு அதிகஅளவில் கொரோனா  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரு கின்றன.  கடந்த 2 வாரங்களாக சென்னை யில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. எனவே  பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். எனவே வணிக  நிறுவனங்கள் தங்களுடைய அங்காடி களில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து, தனி மனித இடைவெளியை பின்பற்றி பொது மக்களை அனுமதிக்க வேண்டும்.  வணிக வளாகங்கள், திரையரங்கு, துணி கடைகள் போன்ற வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும்.  கொரோனா தொற்றில் இருந்து  பாதுகாத்து கொள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் சென்னை மாநகராட்சி வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.