சென்னை, ஜூலை 7 - சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப் படுத்தும் வகையில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனை வரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்து செல்வோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.