திண்டுக்கல், ஆக. 28 - தமிழகத்திலுள்ள பட்டியல் வகுப்பினருக்கு உள்ளேயும் பின்தங் கிய பிரிவினராக இருக்கும் அருந்ததி யர் மக்களுக்கு, தமிழகத்தில் 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கி யது செல்லும்; சமூகத்தில் ஒடுக்கப் பட்ட - விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்கான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு சிறப்புமிக்கத் தீர்ப்பை அண்மையில் வழங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், முற்போக்கு, ஜனநாயக சக்திகளும், அருந்ததியர் இயக்கங் களும் சுமார் 15 ஆண்டு காலமாக நடத்திய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்று வெற்றியாக இந்த தீர்ப்பு அமைந்தது. இந்நிலையில், சமூகநீதியை உறுதிப்படுத்தும் வகையிலான உச்சநீதிமன்றத்தின் இந்த வரவேற்கும் விதமாக, வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 29) திண்டுக்கல்லில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு திண்டுக்கல் ஆர்.எம். காலனியில்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் செயலாளர் தோழர் என். வரதராஜன் நினைவுத்திடலில் நடைபெறும் இம்மாநாட்டில், கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே. பாலபாரதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ், திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் ஆதித்தமிழர் பேரவையின் மாநிலத் தலைவர் இரா. அதியமான், ஆதித்தமி ழர் கட்சியின் மாநிலத் தலைவர் கு.ஜக்கையன், தமிழ்ப்புலிகள் கட்சி யின் மாநிலத் தலைவர் நாகை. திரு வள்ளுவன், திராவிடத் தமிழர் கட்சி யின் மாநிலத் தலைவர் வெண்மணி, தமிழர் சமூக நீதிக்கழகத்தின் மாநிலத் தலைவர் சுரா. தங்கபாண்டியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.