சென்னை, மே 26-
நியூ மாங்க் குங்ஃபூ அசோசியேஷன் ஆப் ஆந்திர பிரதேசம், கே.எல்.பல்கலைக் கழகம், என்.டி.ஆர். மாவட்டம் சார்பில் ஆந்திரா வில் நடைபெற்ற 36ஆவது தென்னிந்திய அனைத்து வகை தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் 2023 போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆர்.கே. நகர் பகுதி 38 வட்டம் சார்பில் நடைபெறும் சிலம்பாட்டம் பயிற்சி வகுப்பை சேர்ந்த 20 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 13 மாணவர்கள் தங்கப் பதக்கமும் 6 மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும், 1 மாணவர் வெண்கலப் பதக்கமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். சிலம்பம் இளைஞர் விளையாட்டு சங்கத்தின் தேசிய செயலாளர் உ.விஜயன் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் கோகுல், ரிஸ்வானா, நவீத், ஆர்கே நகர் பகுதி பொருளாளர் ஷாஜகான், பெற்றோர்கள் சத்யபிரியா, சண்முகம் ஆகியோருக்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.