districts

img

போக்குவரத்து நெரிசலால் திணறிய கோயம்பேடு மார்க்கெட் !

சென்னை, ஜன. 10- தமிழகத்தில் கனமழை க்கு பிறகு தற்போது குளிர்காலம் தொடங்கி யுள்ள நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா மற்றும்  வட மாநிலங்களில் இருந்தும்  வழக்கத்துக்கு மாறாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 500 டன் காய்கறி கூடுதலாக வந்துள்ளது. சென்னை கோயம்பேடு அண்ணா காய்கறி சந்தை க்கு முதல் முறையாக 5, 500  டன் காய்கறிகள் வந்துள்ளன. சமீபகலமாக குறைவாக வந்து கொண்டிருந்த தக்காளி திங்களன்று 1,100 டன் அளவில் வந்துள்ளன. இதனால், 150 ரூபாய் வரை விற்பனை செய்த தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரவிருக்கும் பொங்க லையொட்டி கோயம்பேடு காய்கறி சந்தையில் சிறப்பு விற்பனையும் களைகட்டி யுள்ளன.  பூசணிக்காய் நாள் ஒன்றுக்கு 300 டன் அளவில் வரத்து உள்ளது.  1 கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பிடி கருணை கிழங்கு மொச்சை, துவரை, காரா மணி பயறு சர்க்கரை வள்ளிக் கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கூடுத லாக வந்துள்ளன.