districts

img

மாண்டஸ் புயல்: நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

விழுப்புரம், டிச. 10- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து கன மழை பொழிந்தது. இதனால் செஞ்சி, ஊரணி தாங்கல், அனந்தபுரம், மேல்மலை யனூர், அவலூர் பேட்டை ஆகிய பகுதிகளில் பயிரிடப் பட்ட சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும் ஊரணி தாங்கல் கிராமத் தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆறு மாதமாக பாது காக்கப்பட்டு வைத்திருந்த நெற்கதிர் கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது விவ சாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.