சென்னை,அக்.3- சென்னை புறநகர் பகுதியில் மாமல்லபுரம், செங்கல்பட்டில் மேலும் 2 புதியதாக பேருந்து நிலையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பேருந்து நிலைய பணிகள் நிறை வடைந்ததும். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னை பெரு நகர வளர்ச்சி ஆணையம் (சி.எம்.டி.ஏ) சார்பில் புறநகர்ப் பகுதிகளான மாமல்ல புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் மேலும் 2 புதியதாக இரண்டு பேருந்து நிலையங்கள் அரசு, தனியார் பங்களிப்புடன் கட்டப்பட உள்ளது. இந்த நிலையங்களுக்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாமல்லபுர புதிய பேருந்து நிலையத்தில் வணிக அலுவலங்கள், கடைகள், நவீன பேருந்து நிறுத்து மிடங்கள், கார், மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடங்கள், பேருந்து பணிமனை மற்றும் பெட்ரோல் நிரப்பும் நிலை யங்கள் ஆகியவை அமைகிறது. 22 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பேருந்து முனையம் கட்டப்பட உள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள காலி இடத்தில் புதிய பேருந்து நிலையம் விரைவில் கட்டப்பட உள்ளது. இதற்காக அங்கு உள்ள காலி நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. செங்கல்பட்டில் தற்போது உள்ள பேருந்து நிலையம் (ரயில் நிலையம் எதிரில்) நெருக்கடியான பகுதியில் அமைந்து இருப்பதால் பல்வேறு இடை யூறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட இருப்பதால் அங்கு போக்குவரத்து நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட உள்ளது. நீண்ட தூரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. புறநகர் பகுதி களில் மேலும் 2 புதிய பேருந்து நிலை யங்கள் கட்டப்பட உள்ளதால் மாமல்ல புரம், செங்கல்பட்டில் போக்கு வரத்து நெருக்கடி விரைவில் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.