நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 102வது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் அவரது சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. புதுச்சேரி கருவடிக்குப்பம் இடுகாட்டில் அமைந்துள்ள அவரது சமாதியில் உள்ள சிலைக்கு, குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள்,நாடக கலைஞர்கள் உட்பட திரளானோர் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினார்கள்.