districts

img

ஸ்டென்ட் பயன்பாட்டை அவசியமற்றதாக்கும் மருந்து பூசப்பட்ட பலூன் சிகிச்சை

சென்னை, மார்ச் 13- இதய ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க மருந்து பூசப்பட்ட பலூன்  சிகிச்சை புதிதாக அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இது ஸ்டென்ட் பயன்பாட்டை அவசிய மற்றதாக்கி தமனிகளின் இயல்பான செயல்பாட்டை அப்படியே தக்க வைப்ப தற்கான ஒரு புதிய மாற்று வழிமுறையா கும். சென்னை காவேரி மருத்துவமனை யில் 74 வயதான ஒரு நபருக்கு மருந்து  பூசப்பட்ட பலூன்களை  பயன்படுத்தி சிக்க லான ஒரு கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்டென்ட்களை சேர்க்காமல் லேசர் மற்றும் டிசிபி-ஐ பயன்படுத்தி இமேஜிங் தொழில்நுட்ப வழிகாட்டல்களுடன் இம்மருத்துவ செயல்முறையை இதயவியல் மருத்துவர்களின் குழு செய்திருக்கிறது. ஸ்டென்ட் பொருத்துவதன் பக்கவிளைவுகளை இந்த புதுமையான சிகிச்சைமுறை நீக்கிவிடுகிறது; கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி-க்கு ஸ்டென்ட்கள் பொருத்தும் வழிமுறைக்கு ஒரு திறன்மிக்க மாற்று வழிமுறையாக இது இருக்கக்கூடும் என்று மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  மருத்துவமனையின் இதயவியல் துறையின்  தலைமை நிபுணர் டாக்டர் கே.பி.சுரேஷ் குமார் கூறினார்.   அடைப்பு ஏற்பட்டுள்ள தமனியை விரிவுபடுத்த ஒரு ஸ்டென்ட் உட்செலுத் தப்பட்டு நிரந்தரமாக வைக்கப்படும் வழக்கமான ஸ்டென்ட் பொருத்தலைபோல் அல்லாமல் ஊதி விரிவாக்கப்பட்ட 60  நொடிகளுக்குள் பலூனின் மேற்பரப்பி லிருந்து மருந்துப் பொருளை (சிரோலிமஸ்) டிசிபி வெளியிடுகிறது; இதன் மூலம் ஸ்டென்ட் பொருத்துவதில் தொடர்புடைய இடர்களை இது நீக்கி விடுகிறது என்று அவர் தெரிவித்தார். மருந்து பூசப்பட்ட பலூனை பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சை  நோயாளி களுக்கு  நல்ல பயனளிக்கும் என்று இத்தாலி  நாட்டின் மிலான் நகரில் அமைந்துள்ள இஎம்ஓ  கொலம்பஸ் இதயவியல் மையத்தின் இயக்குநரும் இத்தகைய சிகிச்சையில் சர்வ தேச அளவில் முன்னோடி என்றும் அறியப் படுபவருமான மருத்துவப் பேராசிரியர் அன்டோனியோ கொலம்போ கூறினார்.