districts

img

கண்டாச்சிபுரத்தில் அமைதியை ஏற்படுத்துக: சிபிஎம்

விழுப்புரம், ஜன. 21- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் கடந்த 16ஆம் தேதி இரண்டு நபருக்குள் ஏற்பட்ட மோதல், இரு சமூக மோதலாக மாறி, அப்பகுதி மக்கள் மத்தியில் பதட்டமான சூழ்நிலை நிலவு கிறது. இந்நிலையில் அப்பகுதியில் பொது அமைதியை நிலை நாட்டவும், அப்பாவி தலித் இளைஞர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் நடைபெற்ற இரு சமூக மோதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள தலித் இளைஞர்கள் ஆர்.அகத்தியன், ஏ.சாந்தவேல் ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வேல்மாறன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன், வட்டச் செயலாளர் எஸ்.கணபதி, கிளைச் செயலாளர் எம்.ஸ்ரீதர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 16ஆம் தேதி கண்டாச்சி புரம் பேருந்து நிலையத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் மதுபோதையில் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு சிலர் இந்த மோதலை இரு சமூ கத்தினர் இடையேயான மோத லாக மாற்றியதால் இரு சமூகத்திலும் உள்ள அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், அப்பகுதியில் பதட்ட மான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் சம்பவத்தன்று அந்த வழி யாக வந்த 4 தலித் இளைஞர்கள் மீது ஒரு சமூகத்தினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆர்.அகத்தியன், ஏ.சாந்தவேல் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்து முண்டியம்  பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கண்டாச்சிபுரம் பேருந்து நிலை யத்தில் இருவர் குடி போதையில் தாக்கிக் கொண்டபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அந்த இளைஞர்களை சமாதானம் செய்து அனுப்பி வைக்காமல், அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருந்தால், அது தனி மனித பிரச்சனையாக இருந்திருக்கும். காவலர்களின் அலட்சியத்தால் இரு சமூக மோதலாக மாறி விட்டது. எனவே மாவட்ட நிர்வாகம், காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு அப்பகுதியில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை போக்கும் வகையில் இரு சமூக மக்களையும் அழைத்து சமாதானக் கூட்டம் நடத்த வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, இரு தரப்பினரிடமும் உறுதி மொழி பெற வேண்டும். கலவரத்தை பயன்படுத்தி நான்கு தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.