சென்னை, மே 23-
தொழிற்பயிற்சி நிலையங்களில் பணி யாற்றும் பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செய லாளர் என்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முழுவதும் 102 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. அதில் 32 தொழிற்பயிற்சி நிலையங்களில் 160 பயிற்றுநர்கள், 27 உதவியாளர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் அரசு துறை யில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள் என தெரி விக்கப்பட்டது. இதில் தொழிற்பயிற்சி நிலை யங்களில் பணியாற்றும் பயிற்றுநர்கள் தவிர மற்ற துறைகளில் தொகுப்பூதியத்தில் பணி யாற்றிய அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலைகளின் கூடுதல் தேவைக்கு ஏற்ப 32 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் கூடுதலாக பொது மற்றும் தனியார் கூட்டாண்மை, சென்டர் ஆப் எக்ஸ்லென்சி, கைவினைஞர்கள் பயிற்சி ஆகிய புதிய பிரிவுகள் தொடங்கப் பட்டன. இந்த திட்டத்தில் நிரந்தர ஊழி யர்களை நியமிக்காமல், தொகுப்பூதிய பயிற்றுநர்களுக்கு ரூ.20 ஆயிரம், சில பயிற்சி மையங்களில் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் 40 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உதவி யாளர்களாக 27 பேர் நியமிக்கப்பட்டனர்.
எனவே தொகுப்பூதிய பயிற்றுநர்கள், உதவியாளர்கள் அனைவரையும் கால முறை ஊதியத்தில் பணியமர்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.