சென்னை,ஜூலை 16-
‘அனலாக்’ அடாவடி வசூலுக்கு உயர்நீதி மன்றம் தடைவித்துள்ளதை வரவேற்பதாக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் தெரி வித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செயல்படுகின்றனர். 2012 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு டிஜிட்டல் முறையில் செட்டாப் பாக்ஸ் வழியாக கேபிள் டிவியை ஒளிபரப்பு செய்ய உத்தரவிட்டது. 2017 ஆம் ஆண்டு முதல் செட்டாப் பாக்ஸ் வழியாக மட்டுமே ஒளிபரப்பு வழங்க வேண்டிய நெருக்கடி உருவானது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செட்டாப் பாக்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கின.
இதன்பிறகு, அரசு கேபிள் டிவி கார்ப்ப ரேசன் முன்பு வழங்கி வந்த அனலாக் முறைக்கு ஆப ரேட்டர்கள், பல லட்சம் ரூபாய் அனலாக் நிலுவைத் தொகை செலுத்த உத்தர விட்டது. தமிழகம் முழுவதும் ஆபரேட்டர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. ஆபரேட்டர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது. வருவாய்த்துறை மூலமாக சொத்துக்களை பறிமுதல் செய்ய நோட்டீஸ் அனுப்பியது. ஒருசில இடங்களில் ஆபரேட்டர் களை காவல்துறையினர் கைது செய்தனர். \
இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன்மீது நடைபெற்ற வழக்கு விசாரணையில், அரசின் நடவடிக் கைகளுக்கு வியாழனன்று (ஜூலை 13) உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை வரவேற்பதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். வீரமுத்து, பொதுச்செயலாளர் சுப.வெள்ளைச்சாமி, பொரு ளாளர் ஆர்.கோவர்தனன் ஆகியோர் விடுத்துள்ள அறி க்கையில் தெரிவித்துள் ளனர்.