districts

சென்னை முக்கிய செய்திகள்

மடிப்பாக்கம், மணப்பாக்கம் பகுதியில் குழாய் மூலம் குடிநீர்

சென்னை,செப்.27- சென்னையை சுற்றியுள்ள பல பகுதி களை சென்னை நகருடன் இணைத்து சென்னை மாநகராட்சி பகுதிகள் விரி வாக்கம் செய்யப்பட்டன.  சென்னை நகருடன் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்ட 7.9 லட்சம் குடும்பங்களுக்கு 61.42 மில்லி யன் கன அடி தண்ணீர் வழங்கப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகள் ரூ.428.17 கோடி செலவில் நடக்கிறது. சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்ட நெற்குன்றம், மடிப்பாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம், மாதவரம் ஆகிய பகுதி களில் விரைவில் குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் குடிநீர் விநியோகத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த பகுதிகள் சென்னை மாநகராட்சி யுடன் சேர்க்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட உள்ளது. மணப்பாக்கத்தில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பத்தினர் ஆழ்துளை கிணற்று தண்ணீரை மட்டுமே நம்பி உள்ளனர். பல இடங்களில் கிணறு வறண்டு போனதால் டேங்கர் லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் குடிநீர் பிரச்சனை விரைவில் தீர உள்ளது. நீலாங்கரை, செம்மஞ்சேரி ஆகிய பகுதி களுக்கு இன்னும் 2 ஆண்டுகளில் குடிநீர் வழங்கப்பட உள்ளது. செம்மஞ்சேரியில் பொதுமக்கள் பலர் தனியார் கிணறு மற்றும் பஞ்சாயத்து கிணற்று தண்ணீரை பயன்படுத்தி வரு கின்றனர். இன்னும் 2 ஆண்டுகளில் அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது. மாதவரம் பகுதியில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கான பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. விநியோகம் செய்வதில் கசிவு உள்ளதா? என்று குடிநீர் வாரியம் சோதனை நடத்தி வருகிறது. விரைவில் குடிநீர் வழங்கும் பணிகள் தொடங்கும். அதன் பிறகு பொதுமக்கள் குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கம்பள விரிப்புகள் திருவிழா 2023
ஜெய்பூர், செப்,28- கையால் நெய்யப்படும் கம்பள உற்பத்தியில் புகழ்பெற்ற ஜெய்பூர் ரக்ஸ், அதன் வருடாந்திர ‘கம்பள விரிப்புகள் திருவிழா 2023’ஐ நடத்திவருகிறது.  இதன் மூலம் கிடைக்கும் வரு மானத்தை கல்வியில் சாதனை படைத்த நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்த மாண வர்களுக்கு வழங்க இருப்பதாகவும் அது அறிவித்துள்ளது. இந்த ஆண்டு திருவிழா, வாடிக்கை யாளர்களுக்கு ஒரு சிறப்பான அனு பவத்தை வழங்குவதோடு, கம்பள விரிப்பு வகைகளில் பிரத்யேக தள்ளுபடி, திறமைமிக்க நெசவாளர்களுடன் நேரடி யான கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் ஜெஆர் மெரிட்டோரியஸ் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் மூலம் கல்வி உதவித் தொகை என பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி உள்ளது.

முறைசாரா சங்க கிளை உதயம்

சென்னை, செப். 27 - சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை, பல்லாவரம் பகுதி அஸ்தினாபுரம் நேதாஜி நகரில் உதயமானது. இந்த கிளை அமைப்புக் கூட்டத்தில், பகுதி தலைவர் மனோகர், செயலாளர் ஜி.மருதமுத்து  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளைத் தலைவராக ஏ.அத்தியப்பன், செயலாளராக எம்.கோவிந்தம்மாள், பொருளாளராக ஜெ.அமுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பார்க்கிங் இடங்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை,செப்.27- சென்னை மாநகரில் உள்ள 200 வார்டுகளிலும்   வாகனங்களை நிறுத்த 500 பார்க்கிங் செய்யும் இடவசதி உள்ளது.  சென்னை மாநகராட்சிக்கு பார்க்கிங் கட்டணமாக மாதந்தோறும் ரூ.65 லட்சம் வருமானம் வருகிறது. பார்க்கிங் இடங்க ளில் கார்களுக்கு 1 மணிநேரத்துக்கு ரூ.20-ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5- ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் சில மாதங்களுக்கு முன்பு வாகன நிறுத்த கட்டணம் 1 மணிநேரத்துக்கு ரூ.60-ஆக உயர்த்தப்பட்டது. இதனால் மாநக ராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்தது.  அடுத்த மாதம் வணிக பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் பார்க்கிங் இடங்களை கண்டறியும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபடுவார்கள். அதன் பிறகு பார்க்கிங் இடங்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர்  ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தி பார்க்கிங் மேலாண்மை முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனர். இதற்கிடையே சாலை ஓரங்களில் ஏற்கெனவே உள்ள பார்க்கிங் பகுதிகளில் 130 வாகனங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. இதில் 205 வாகனங்களை சென்னை மாநகராட்சி பறிமுதல் செய்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள வாக னங்களை உரிமை கோர 15 நாட்கள் அவ காசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் உரிமை கோராவிட்டால் வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

வேன் கவிழ்ந்ததில் 7 ஆயிரம் முட்டைகள் வீண்

சென்னை,செப்.27-  கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முட்டை வியாபாரி பரம சிவம். இவர் வண்ணாரப் பேட்டை, தண்டையார் பேட்டை போன்ற பகுதி களில் உள்ள கடைகளுக்கு சில்லரையாகவும் மொத்த மாகவும் முட்டை சப்ளை செய்து வருகிறார். இவர் சரக்கு வேனில் 10 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக் கொண்டு  அம்பேத்கர் நகரில் உள்ள கடைக்கு முட்டை சப்ளை செய்வதற் காக சென்றார். அப்போது அங்கிருந்த மழைநீர் வடிகால்வாய் மீது மினி வேன் ஏறி இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த முட்டை கள் நொறுங்கியது. இதில்  7 ஆயிரம் முட்டைகள்  நொறுங்கியது.

24-வது முறையாக நிரம்பியது ஆண்டியப்பனூர் அணை

திருப்பத்தூர், செப்.27- தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆண்டியப்பனூர் அணை 24-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஜவ்வாதுமலை தொடர்களிலும், ஏலகிரி மலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டியது.  பகல் நேரங்களில் வழக்கமான வெயில் கொளுத்தினாலும், இரவு நேரத்தில் தொடங்கும் மழை விடிய, விடிய கொட்டி வருகிறது. இது மட்டுமின்றி தமிழ்நாடு- ஆந்திர எல்லை பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அணை கனமழை காரணமாக 24-வது முறையாக நேற்று நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.  இந்த அணை 2007 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.  அணையின் முழு கொள்ளளவு 112.2 மில்லியன் கன அடியாகும். இதன் உயரம் 8 மீட்டராகும். அணையில் இருந்து விநாடிக்கு 23.48 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் தண்ணீர் அருகாமையில் உள்ள எகிலேரி, செலந்தம்பள்ளி ஏரி, மடவாளம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.  மேலும், தொடர் மழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

250 கூடுதல்  சிறப்பு பேருந்து இயக்கம்

விழுப்புரம்,செப்.27- அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகள் வசதிக்காக 250 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து இயக்கத்தை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்ட உள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

எரிசாராயம் கடத்தியவர்கள் கைது
திருவண்ணாமலை,செப்.27- திருவண்ணாமலை மாவட்டத்தில் எரிசாராயம் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு போலீசார் திருவண்ணாமலை ஆரணி சாலையில் ரோந்து பணியில்  ஈடுபட்டு வந்தனர்.   அப்போது ஆரணியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி ஒரு லாரியில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 220 கேன்களில் 7,200 லிட்டர் எரிசாராயம் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, விலை உயர்ந்த கார் இரண்டையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் 7 பேரை கைது செய்தனர்.

இந்திய பொறியாளர் சங்க தலைவராக  ஜி.ரங்கநாத் தேர்வு 

ஓசூர்,செப்.27- கவுகாத்தியில் நடைபெற்ற தேர்தலில், இந்திய பொறியாளர் சங்கத்தின் தேசிய தலைவராக ஓசூர் அதியமான் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இதனை தொடர்ந்து, அதியமான் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் என்.எஸ்.பத்ரி நாராயணன் (தன்னாட்சி செயல்பாடு), முதல்வர் எஸ்.வெங்கடேசன் வானவியல் துறை தலைவர்   அறிவுடைநம்பி, உயிரி தொழில்நுட்ப துறை தலைவர் மணிவாசகன், உயிரியல் மருத்துவ துறை தலைவி உதயசூரியா, கணித துறை தலைவி பிரமிளா கலாதரன், ஆங்கிலத்துறை தலைவர் உத்தம் குமார், வேதியியல் துறை தலைவர் சிவகுமார், தகவல் தொழில்நுட்ப துறை தலைவி திலகவதி, மின்னணு தகவல் துறை துணை தலைவி, மேனகா தேவி மற்றும் இந்திய பொறியாளர் சங்க மாணவ பிரிவினர் கல்லூரி முதல்வர் ரங்கநாத்தை பாராட்டி, வாழ்த்தினர். மேலும், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.