districts

சென்னை முக்கிய செய்திகள்

2 ஆண்டுகளாக தூர்வாரப்படும் மதுராந்தகம் ஏரி

மதுராந்தகம்,ஜன.31- மதுராந்தகம் ஏரியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய  ஏரியாக மதுராந்தகம் ஏரி அமைந்துள்ளது. சுமார் 4,752 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள  ஏரியில் 2,411 ஏக்கர் நீர் பிடிப்பு பரப்பாக வும், 932.49 ச.கி.மீ., நீர்வரத்து பகுதிகளாக வும் உள்ளன. ஏரிக் கரையின் மொத்த நீளம்  3,950 மீட்டராக உள்ளது. ஏரியின் முழுக் கொள்ளளவான 24.30 அடி  வரையில் தண்ணீர் சேமிக்க முடியும். இந்த  ஏரியின் மூலம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கடப்பேரி, கத்திரிச்சேரி, மதுராந்த கம், வளர்பிறை, முள்ளி, முன்னூத்தி குப்பம்,  விளாகம், முருக்கஞ்சேரி, விழுதமங்களம் உட்பட 36 கிராமங்களில் மொத்தம் 2,853 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஏரியில் வண்டல் மண் படிந்து தூர்ந் துள்ளதால், ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, ரூ.120 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை கடந்த 2021 முதல் பொதுப்பணித் துறையின் பாலாறு கீழ்வடி நிலக்கோட்டை மேற்கொண்டுள்ளது. இதற்காக, கலங்களை உடைத்து ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், தூர்வாரும் பணிகள் நிறை வடைந்து மீண்டும் நீரை சேமிக்கும் வரை,  பாசனத்துக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் 2 ஆண்டுகளாக விவசா யம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், சிறப்பு  நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். ஏரியின் கலங்கள் மற்றும் கரைகளை உடைத்து தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதால், மழை பெய்தாலும் ஏரியில் தண்ணீரை சேமிக்க வாய்ப்பு இல்லை. இதனால், பாசனத்துக்கு தண்ணீரின்றி 2,853 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மதுராந்தகம் மற்றும் அதைச்  சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில்  குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரியில் கடந்த 2  ஆண்டுகளாக நீர் சேமிக்க முடியாத நிலை  உள்ளது. இதனால், விரைவில் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. குறைந்த அளவிலான தண்ணீர் கொண்டு  விவசாயம் செய்யும் வகையில், வேளாண் துறை மூலம் மதுராந்தகம் மற்றும் அதன்  சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயி களுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கி,  தேவையான உபகரணங்கள் மானிய விலையில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஏரியில் தூர்வாரும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐஐடி கல்வி நிலையத்திற்கு  ரூ.110 கோடி: அள்ளிக் கொடுத்த முன்னாள் மாணவர்

சென்னை, ஜன.31- செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் துறைக்கு என தனி ஆராய்ச்சிப் பள்ளியை உருவாக்க சென்னை ஐஐடி கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவர் 110 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். அவருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். நாட்டின் மிக உயரிய, தரம் வாய்ந்த கல்வி நிலை யங்களில் ஐஐடி கல்வி நிலை யம் ஒன்று. நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த  ஐஐடி மையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சென்னை  ஐஐடியில் ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியலுக்கான ஆராய்ச்சிப் பள்ளிக்கு என  அம்மையத்தின் முன்னாள்  மாணவரான சுனில் வாத்வானி ரூ.110 கோடி நன்கொடை அளித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். கடந்த 1975 ஆம் ஆண்டு ஐஐடியில் பட்டப்படிப்பு மேற்கொண்டார் சுனில் வாத்வானி. பின்னர் சுகாதார துறையில் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக அதில் முதலீடு செய்தார். அவரது நிறுவனங்கள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள பெரும் நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன. இந்நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தாம் படித்த சென்னை ஐஐடி மையத்துக்கு அவர் ரூ.110 கோடி நன்கொடையாக அளித்துள்ளார். இந்திய ஐஐடி மையங்களுக்கு தனி ஒரு நபர் அதிகபட்சமாக வழங்கிய நன்கொடை இதுவாகும்.

திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமின் கேட்டு மனு: இளம்பெண் ஆஜராக உத்தரவு

சென்னை,ஜன.31- சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்  ரேகா, மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு பேசிய படி சம்பளம் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ரோ மதி வாணன் மற்றும் அவருடைய மனைவி  இருவரும் சேர்ந்து ரேகாவை கட்டாயப் படுத்தி வேலை வாங்கியதோடு, அவரை  அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்ப டுகிறது.  இதுபற்றி பாதிக்கப்பட்ட ரேகா அளித்த புகாரின் பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆண்ட்ரோ மதி வாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வன்கொடுமை சட்டம், ஆபாச மாக பேசுவது, தாக்கியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த  ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் ஆந்திராவில் கைது செய்தனர். இந்நிலையில் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,‘புகார்தாரரை எந்தவிதத்திலும் துன்புறுத்தவில்லை. அவரை குடும்பத்தில் ஒருவராக கருதி அவருக்கு தனி படுக்கை அறை ஒதுக்கி உரிய பாதுகாப்பு வழங்கினோம். மேல்படிப் புக்கு ஏற்பாடு செய்தோம். நாங்கள் எந்த  குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என  கூறப்பட்டுள்ளது இந்நிலையில் ஜாமீன் மனு மீதான  விசாரணை புதனன்று(ஜன.31) நடை பெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, காவல் துறை மற்றும் பாதிக்கப்பட்ட இளம்  பெண் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் இளம்பெண் 2 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

அண்ணாமலை நகரில் அடிக்கல் நாட்டு விழா

சிதம்பரம், ஜன.31- சிதம்பரம் அண்ணா மலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட ஒருங்கி ணைந்த பொது சுகாதார ஆய்வுக் கூடம் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.  இந்த விழாவில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்  துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகி யோர் பங்கேற்றனர். ரூ.18 கோடியில் அதி தீவிர அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர். 3 சுகா தார நிலையங்களுக்கு கூடுதல் கட்டடங்களையும் 8 துணை சுகாதார நிலைய புதிய கட்டங்களையும் திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்,“இந்த மருத்துவமனைக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வெளியே சென்று வாங்கி கொள்ளுங்கள் என்ற புகார் வந்துள்ளது. இது வருத்தமளிக்கிறது. இது போன்ற தவறு கள் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமை யான நடவடிக்கை எடுப் போம்”என்றார். விழாவில், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சி.திருப்பதி வரவேற்றார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் கோ.ஐயப்பன் (கடலூர்). ம.சிந்தனைசெல்வன் (காட்டுமன்னார்கோவில்), அண்ணாமலை நகர் பேரூ ராட்சி தலைவர் கே.பழனி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.