மதுராந்தகம், ஜூன் 14-
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை யில் மதுராந்தகம் ஏரிக்கரையில் புறவழிச் சாலை பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது.
இந்த நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாதால் பயணிகள் பேருந்துக்காக சாலையில் காத்திருக்கும் நிலை இருந்தது. மேலும், வெயில், மழை காலங்களில் சிரமப்படுகின்றனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பயணிகள் சாலை யில் நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதனால், பள்ளி, கல்லூரி மாண வர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. இதே நிறுத்தத்தில், சென்னை திருச்சி மார்க்கத்தில் உள்ள நிறுத்தத் தில் நிழற்குடை உள்ளது. ஆனால், திருச்சி சென்னை மார்க்க நிறுத்தத்தில் மட்டும் இதுவரை நிழற்குடை அமைக்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் நகர கிளை சார்பில் இப்பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கவேண்டும் என்று பயணகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப் பட்ட துறைகளுக்கு அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் சாலை ஓரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற் கான ஏற்பாடுகள் இல்லை.
இதுகுறித்து அரசு விரைவு பேருந்து ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பலர், மதுராந்தகம் புறவழிச்சாலை யில் இறங்கும் நிலை உள்ளது. இந்த இடத்தில் பேருந்துகளை ஓரமாக நிறுத்த போதிய இடம் இல்லாததால் அதிகாலை நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இதனை தவிர்க்க போதிய இட வசதி யுடன் பேருந்துகளை நிறுத்தவேண்டும் என்று பயணிகள் கூறியுள்ளனர்.