கள்ளக்குறிச்சி, ஆக.1-
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் மேற்கு ஒன்றியத்தில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளான புத்தனந்தல் அணை,உஎ வீட்டுமனைப் பட்டா, 100 நாள் வேலை, சாலை வசதி, குடிநீர் பிரச்ச னைகளுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி களமருதூர் கடைவீதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வக் கோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை கலந்து கொண்டு பேசுகையில், “தமிழ்நாட்டில் அண்ணா மலை துவங்கி இருக்கும் நடைபயணத்தால் மக்க ளுக்கு எந்தவித பயனும் இல்லை”என்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மக்கள் மன்றத்தில் மட்டு மல்ல சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த கூட்டத்திற்கு ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.ஏழுமலை.பி.சுப்பிரமணியன், எம். செந்தில், இ.அலமேலு, ஒன்றிய செயலாளர் டி.எஸ்.மோகன் மாவட்டக் குழு கே.அய்யனார் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.