சென்னை, ஜூன் 13-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு தந்தை முத்து விஜயன் (86) செவ்வாயன்று (ஜூன் 13) காலமானார்.
எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பாஸ்கர், வாசுகி, ஸ்ரீனிவாசன், பழனியம்மாள், கோதண்டபாணி, சா.டேனியல் ஜெயசிங், ஹேமலதா, சுமதி, அண்ணா குபேரன், வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் வி.விஜயகுமரன், ம.அந்தோணி சாமி, டி.ஏழுமலை, ஜி.மகேந்திரன், எம்.விவேகானந்தன், கோபிநாதன், தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலைச் செல்வி, ஜெயராமன், முத்து குமரவேல், வி.வெங்கடேசன், தலைமைச் செயலக ஊழி யர் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், முன்னாள் மாநில நிர்வாகிகள் கே.எம்.தியாகராஜன், சுகுமார், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச்செயலாளர் கதிர்வேல், எஸ்.பாக்கியலட்சுமி (மாதர்சங்கம்), மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, சீனிவாசலு, பட்டாபி (செங்கொடி சங்கம்), எஸ்.ஏ.வெற்றி ராஜன் (ஓய்வு பெற்றோர் நலச் சங்கம்), ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் காந்திராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் அதே பகுதியில் உள்ள இடுகாட்டில் செவ்வாயன்று மாலை 4.30 மணியளவில் எரியூட்டப்பட்டது.