districts

லாரி மோதி மாநகராட்சி தொழிலாளி பலி

சென்னை,ஆக.21-

       தண்டையார்பேட்டை நாவலன் நகரைச் சேர்ந்தவர் வர்ணமூர்த்தி (வயது 58) மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் திங்களன்று காலை அதே பகுதியில் உள்ள கைலாசம் தெருவில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வர்ண மூர்த்தி பலியானார்.