districts

உள்ளாட்சி தேர்தல்  அமைதியாக நடந்தது:  டிஜிபி

சென்னை, பிப்.20- தமிழகத்தில் நகர்புற  உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடை பெற்றதாக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதால் வன்முறை தவிர்க்கப்பட்டது. ஒரு  சில இடங்களில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் விரைந்து சரிசெய்யப்பட்டது. சில நிகழ்வுகள் குறித்து தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார். 

;