districts

சாராயம் விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி, மே 29-

     விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரனை கிராமங்களில் நிகழ்ந்த சோக சம்பங்களை தொடர்ந்து மாநிலம் முழுவதும் சாராய வேட்டையை தடுப்பதற்கு காவல்துறையினர் நட வடிக்கை மேற்கொண்டு வரு கின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வளர் நரசிம்ம ஜோதி தலைமையில் காவ லர்கள் சேஷசமுத்திரம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி(47) தனது வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து ராமசாமியை காவலர்கள் கைது செய்து, அவரிடமிருந்து 13 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.  மாவட்டம் முழுவதும் இந்த சோதனை தொடரும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.