வேலூர். நவ 14 - தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மற்றும் வேலூர் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் நடைபெற்று வரும் 56-வது தேசிய நூலக வார விழா நவ.20 அன்று நிறைவடைகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் நூலக வார விழா மற்றும் புத்தக கண்காட்சியை ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து நூலகத்தை பார்வையிட்டார். இதில் மாவட்ட நூலக அலுவலர்(பொறுப்பு) பழனி, நூலக ஆணைக்குழு அலுவலக கண்காணிப்பாளர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.