சிதம்பரம், பிப். 27- சிதம்பரம் சின்னகாஜியார் தெருவில் தனியார் கட்டிடத்தின் முதல் மாடியில் நூலகம் இயங்கி வந்தது. இந்த நூல கத்திற்கு கச்சேரி தெருவில் ரூ 48 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதனை கடந்த ஜனவரி 5-ந்தேதி காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல மைச்சர் திறந்து வைத்தார். பின்னர்11-ந்தேதி நூலகத்துறையினரிடம் கட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியும் நூல கத்தை இடமாற்றம் செய்யவில்லை. இதனால் நூலகத்தில் ஏற்படும் சிரமத்தை தீக்கதிர் நாளிதழில் பிப்.27 செய்தி கட்டுரை வெளியிடப்பட்டது. தீக்கதிர் செய்தி குறித்து நூலகத்துறை அதிகாரிகள் கடலூர் மாவட்ட நூலகரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். இதனையொட்டி செவ்வாயன்று (பிப்.27) காலை கடலூர் மாவட்ட நூலக அலுவலர் சிதம்பரம் கிளை நூலகருக்கு உடனடியாக புதிய கட்டித்திற்கு நூலகத்தை மாற்ற வேண்டும் எனவும் மார்ச் மாதத்தில் புதிய கட்டிடத்தில் நூலகம் இயங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனைதொடர்ந்து முதல் நூலகத்தில் உள்ள நூல்கள் மற்றும் ரேக்குகள் உள்ளிட்ட தளவாட பொருட்களை சிதம்பரம் நூலகத்தின் ஊழியர்கள் புதிய இடத்திற்கு மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனை அறிந்த நூலகத்தின் வாசகர்கள், மாணவர்கள் அனைவரும் தீக்கதிருக்கு நன்றி தெரிவித்தனர்.