districts

பெண் குழந்தைகளை காப்போம்’உறுதியேற்பு நிகழ்ச்சி

புதுச்சேரி, ஜன. 24- புதுவை தன்னம்பிக்கை கலைக்குழுவும், கல்லூரி மாணவர்களும் இணைந்து “பெண் குழந்தைகளை காப்போம், பெண் கல்வியை உயர்த்துவோம்” என்ற கருத்தை வலியுறுத்தி கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி உறுதியேற்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் கல்வியை உயர்த்துவோம் என்று உறுதிமொழி ஏற்றனர். புதுவை எதிரொலி தப்பாட்ட கலைக்குழு சார்பில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. வரதட்சணை தடுப்பு ஆலொசனை வாரியத் தலைவர் டாக்டர் வித்யா ராம் குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் தன்னம்பிக்கை கலைக்குழு நிறுவனர் எலிசபெத் ராணி புதுவை குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் திட்ட மேலாளர் சாலமன் சவரிராஜ், கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்க நிறுவனர் ராஜா, புதுவை மாநில கோஜி ரியோ கராத்தே சங்க செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், சமூக செயல்பாட்டாளர் நிலா (எ) தெய்வானை, ஆறுமுகம் அறக்கட்டளை நிறுவனர் தனலட்சுமி, அங்கன்வாடி மைய ஆசிரியயை மேரி, தேவிபிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.