districts

img

“கதை சொல்லப் போறோம்  வாங்க” நிகழ்ச்சி

ராணிப்பேட்டை, அக். 3 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ராணிப்பேட்டை கிளை சார்பில் “கதை சொல்லப் போறோம் வாங்க” என்ற தலைப்பில் குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்வு கிளைத் தலைவர் த.ரஜினி தலைமையில் திங்களன்று (அக். 3) நடைபெற்றது. கிளைச் செயலாளர் கோ.கோபால்ராஜ் வரவேற்றார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் முன்னாள் மாவட்டச் செயலாளர் செ.சரவணன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி, தமுஎகச மாவட்டப் பொருளாளர் ஆர்.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வார்டு உறுப்பினர் டி.திலகவதி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். தேர்வுக் குழு ஆசிரியர்களாக கோ.ரங்கநாயகி, செ.சியாமளா, ரா.ஞானச்செல்வி, டி.ஆலிஸ் விமலா ஆகியோர் செயல்பட்டனர். இதில் தா.வெங்கடேசன், ஜெ.ஜெயந்தி, எம்.கிருஷ்ணவேணி, ஆர்.புவனேஸ்வரி, ஏ.ஸ்டாலின், ஸ்ரீதர், தவராஜ், மனோகர், சாக்கன் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.

;