தெளிவாக சிந்தித்து வாக்களிப்போம்: நடிகர் விஜய்சேதுபதி வேண்டுகோள்
சென்னை,ஏப்.3- மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்குப்பதிவு தொடர் பான விழிப்புணர்வு வீடியோவை நடி கர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அதில்,”அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, “யார் வந்தா நமக்கென்ன?,யார் காசு கொடுக்குறாங்களோ அவங்க ளுக்கு ஓட்டு போடுவோம், ஓட்டுப் போட்டும் ஒன்னும் ஆகப்போறது இல்ல” அப்படின்னு இருக்கும். இந்த மனநிலை எல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு நாம நமக்காக இல்லைன் னாலும், நம்ம குழந்தைகளின் மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துக்காக ஓட்டு போடணும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுறது, ஓட்டை விற்பது எந்தளவுக்கு துரோக மோ அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. உங்களுக்கு பிடிச்சவங்க, பிடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி அவங்களை பற்றி தெரிஞ்சுகோங்க. அவர்களால் நமக்கென்ன பயன் என யோசிப்பதை விட நாட்டுக்கென்ன பயன் என நினையுங்கள். அதில் நம்முடைய சுயநலமும் இருக்குது. நாமெல்லாம் சேர்ந்தால் தானே நாடு. நமக்கு நம்முடைய இன்றைய நாளும், குழந்தைகளின் எதிர் காலமும் முக்கியம். நம்மை ஆள ப் போறது யார், யாரிடம் ஆட்சியை கொடுக்கப்போகிறோம், அவங்க ளுக்கு என்னெல்லாம் தகுதி இருக்கு, அவங்க இதுக்கு முன்னாடி என்னெல்லாம் செஞ்சிருக்காங்க, சொல்லியிருக்காங்க என எல்லாத்தை யும் அலசி ஆராய்ந்து ஓட்டுபோடுங்க. இதுவரை அரசியல் செய்தி களை கேட்கவில்லை என்றாலும், பார்க்க வில்லை என்றாலும், பேசவில்லை என்றாலும் பரவாயில்லை. இன்று முதல் தேர்தல் முடியும் வரை தின மும் அரசியல் பற்றி பேசுங்க, விவா தம் பண்ணுங்க. ஓட்டு போடுற அன்னைக்கு தெளிவா சிந்திச்சு உங்க ளுக்கு சரின்னு படுற வங்களுக்கு போடுங்க. மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.
மின் விசிறி விற்பனைக்கென்றே சென்னையில் பிரத்யேக மையம்
சென்னை, ஏப். 3- மின்சாதன பொருட்கள் விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் ஹேவெல்ஸ் நிறுவனம் சென்னையில் முதல் முறையாக தனது பிரத்யேக ‘ஸ்மார்ட் சென்டரை’ ரத்னா பென் ஹவுஸ் உடன் இணைந்து துவக்கி உள்ளது. 650 சதுர அடியில் திறக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் பல்வேறு விதமான பேன்களும் அதன் பயன்பாடுகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்தும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். இங்கு வீடு மற்றும் அலுவலக மேற்கூரையில் பொருத்தும் பேன், டேபிள் மற்றும் சுவர்களில் பொருத்தும் பேன்கள் மற்றும் தனிப்பட்ட பேன்கள் என ஏராளமான வகையில் உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற மற்றும் விலைக்கேற்ற பேன்களை தேர்வு செய்து கொள்ளலாம். இங்கு பேன்களுடன் வீடுகளில் வரவேற்பு அறை மற்றும் படுக்கையறைகள் முதல் அலுவலகங்கள் மற்றும் கடைகள் வரை, சுவர்களுக்கான அலங்கார பொருட்கள், திரைச்சீலைகள் மற்றும் பர்னிச்சர்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
இளைஞர் கொலை வழக்கில் ஒருவர் கைது
சென்னை, ஏப். 3- மாதவரம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் வேழவேந்தன் (36). இவர் கருத்து வேறுபாடு காரண மாக தனது குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் வேழ வேந்தன், மாதவரம் பழைய பேருந்து நிலையத்தில் தான் வழக்கமாக தூங்கும் இடத்தில் திங்கட்கிழமை படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த மாதவரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மு.சிவசங்கருக்கும் (42), வேந்தனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்து சிவ சங்கர் சென்றுவிட்டார். இந்நிலையில் அன்று நள்ளிரவு மீண்டும் அங்கு வந்த சிவசங்கர், தூங்கிக் கொண்டிருந்த வேந்தன் தலை மீது ஒரு பெரிய கல்லை போட்டார். இதில் வேழவேந்தன் உயிரிழந்தார். பின்னர் அங்கி ருந்து தப்பி யோடிய சிவசங்கரை காவல்துறை யினர் கைது செய்தனர்.
சென்னையில் குடிநீர் தேவை அதிகரிப்பு: 3,600 லாரிகளில் விநியோகம்
சென்னை,ஏப்.3- சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கோடை காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை இருக்கும் நிலையில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தினமும் 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலவரப்படி 1073 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவையாக அதிகரித்துள்ளது. வீடுகளுக்கான குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் லாரிகளின் நடை கூடியுள்ளது. டயல் வாட்டர் என்ற திட்டத்தில் பணம் செலுத்தி குடிநீர் பெறுவது தற்போது அதிகரித்துள்ளது. இதுவரையில் 900 லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப் பட்டு வந்த நிலையில் தற்போது 1020 லாரிகளாக உயர்ந்துள்ளது வரும் நாட்களில் லாரி நடைகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்படுகிறது. லாரிகள் மூலம் தெருக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகம் செய்தல், தொட்டியில் குடிநீர் வழங்குதல் போன்றவற்றிற்கு 3600 முதல் 3,800 லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. லாரிகள் மூலம் மட்டும் தினமும் 30 மில்லி யன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
அமைச்சர் கார் சோதனை
சிதம்பரம், ஏப்.3- தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் தொல். திருமாவளவன் மற்றும் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதாவை ஆத ரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் . சிதம்பரம் புறவழி சாலை அருகே வரும் 6-ந்தேதி இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கான மேடை அமைக்கும் பணி கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக வேளாண் மற்றும் உழவன் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதபடுத்தி வருகிறார். அமைச்சர் புதனன்று பணிகளை ஆய்வு செய்து விட்டு வரும்போது புற வழிச் சாலை மேம்பாலத் திற்கு அருகே பறக்கும் படையினர் திடீரென அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் உள்ளே மற்றும் காரின் பின்புறம் உள்ள பெட்டி பை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சோதனையிட்டனர். அதில் பணம் உள்ளிட்ட எந்த பரிசு பொருளும் இல்லை இதனால் காரை அனுப்பி வைத்தனர்.
மதுபானம் கடத்தியவர் கைது
விழுப்புரம்,ஏப்.3- விழுப்புரம் அருகே வாகனத்தில் புதுச்சேரி மாநில மது பாட்டிகளை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே உள்ள தென்னம்மாதேவி டோல் பிளாசா அருகே வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட் டுக் கொண்டிருந்தபோது சிறிய சரக்குவாகனத்தில் புதுச்சேரி மாநில மது பானங்கள் மறைத்து கடத்தி செல்வது, சோதனையில் கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் விக்கிரவாண்டி அருகே விசுவ ரெட்டிப்பாளை யத்தை சேர்ந்த சிவக்குமார் (45) என்பது தெரிய வந்தது, போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிட மிருந்து 50 லிட்டர் சாராயம், 2832 பாட்டில் மது பானங் கள், மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பொதுப்பணித்துறையின் மெத்தனமே 5 தொழிலாளர் உயிரிழக்க காரணம்!
சிபிஎம் புதுச்சேரி செயலாளர் ராஜாங்கம் குற்றச்சாட்டு
புதுச்சேரி, ஏப்.3- சுவர் இடிந்து உயிரிழந்த 5 தொழிலாளர்களின் மரணத்திற்கு புதுச்சேரி அரசு முழுபொறுபேற்று இழப்பீடாக தலா ரூ.25 லட்சம் வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதி வசந்தம் நகரில், கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளிகள் மீது மின்துறையின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 தொழி லாளர்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 தொழிலாளர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்ற கட்டுமான பணியை முறையாக கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனமே இச்சம்பவத்திற்கு காரணமாகும். தொழிலாளர் நலன்களை பாது காத்திட உருவாக்கப்பட்ட தொழிலாளர் துறை அதிகாரிகளின் செயலின்மையும் தான் இந்த மரணங்களுக்கு காரணம் என்பதை சிபிஎம் கண்டனத்தோடு குற்றசாட்டை முன்வைக்கிறது. இந்த நிகழ்வு ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசிற்கு தொழிலாளர்கள் மீது துளி கூட அக்கறை இல்லை என்பதை மேலும் ஒருமுறை நிரூபித்துள்ளது. புதுச்சேரி முழுவதும் தொழிலாளர் களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து அரசை வலியுறுத்தி வரு கிறது. தொழிலாளர்களுக்கு முறை யான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா, அதனை தொழிலாளர்கள் பயன்படுத்தி வேலை செய்கிறார்களா, ஊதியம் முறை யாக வழங்கப்படுகிறதா போன்ற அனைத்தையும் அரசின் தொழிலா ளர் துறை கண்காணித்து தொழிலாளர் களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்தகைய நடைமுறையை பின்பற்றாத ஒப்பந்ததாரர்கள் லாப மடைய குறைந்த கூலிக்கு வெளி மாநிலங்களிலிருந்து தொழிலாளர் களை அழைத்து வந்து கொத்தடிமை களாக இப்பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். தொழிலாளர்களின் பாது காப்பை கண்டுகொள்ளாமல் விடு வதின் விளைவு தான் இத்தகைய மரணங்கள் நிகழ்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது. புதுச்சேரி அரசு நிர்வாகம் இது போன்ற சம்ப வங்களை தடுப்பதற்கு மிக கவனமாக பாதுகாப்பு உபகரணங்கள் பயன் படுத்துவதையும், அபாயகரமான இடங்களில் பணியாற்றும் தொழி லாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும். புதுவையில் பணியாற்றும் வெளிமாநில தொழிலா ளர்களின் கணக்கெடுப்பையும் நடத்திட வேண்டும். மேலும் இவ்விவகாரத்தை பல காரணங்களை கூறி ஒரு சிலர் திசை திருப்ப முயலுவதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பொதுப் பணித்துறை, மின்துறை, தொழிலாளர் நலத்துறை என அரசுதுறைகளின் நேரடி அலட்சியத்தால் நடைபெற்ற இந்த மரணங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று காரணம் கூறி கைகழுவி விடாமல் புதுச்சேரி அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் இழப்பீடு வழங்குவதில் உள்ளூர் வெளிமாநிலத்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் நிவாரணம் வழங்கும் வகையில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சமும் காயமடைந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் இழப்பீடாக வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் செயற்கை வைரம்
சென்னை, ஏப்.3- ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை வைரங்களில் கிரீன்வாஷிங் என்னும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. நுகர்வோர் இதுபோன்றவற்றில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று இயற்கை வைர கவுன்சில் எச்சரித்துள்ளது. ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் வைரங்கள், பெரும்பாலும் இயற்கை வைரங்களுக்கு நிலையான மாற்றாக சொல்லப்படுகின்றன. அவை எந்தக் காலத்தி லும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்காது. பெரும்பான்மையான செயற்கை வைரங்கள் பெட்ரோலிய எரிபொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக அங்கிருந்து அதிக அளவிலான கார்பன் டை ஆக்சைடு வெளியேறி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆய்வக வைரங்கள் வாரங்கள் அல்லது சில நாட்களில் கூட தயாரிக்கப்படுகின்றன. இவற்றை லட்சக்கணக்கான ஆண்டுகளாக உருவான இயற்கை வைரங்களுடன் ஒப்பிட முடியாது என்று அந்த கவுன்சில் கூறி யுள்ளது.