districts

img

உறுதிமொழி ஏற்பு

ஆயிரம் முறை அம்பேத்கர் பெயர் சொல்வோம், அரசியல் அமைப்பு காப்போம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தா. வெங்கடேசன் தலைமையில் ஞாயிறன்று (டிச. 22) சீனிவாசன் பேட்டை அம்பேத்கர் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆ. தவராஜ், மாதர் சங்க நிர்வாகி பிரதீபா, வாலிபர் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், ராம், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.