திருவள்ளூர், ஜூலை 15-
பழவேற்காட்டில் திருவள்ளூர் மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் கர்ப்பிணிகள் மற்றும் தாய் சேவைகள்,காச நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,டெங்கு காய்ச்சல்,கண் காது மூக்கு தொண்டை குறித்த பிரச்சனைகள்,பொதுநல மருத்துவம்,கண் மருத்துவம்,உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள், சிறப்பு மருத்துவ சேவைகள் கொண்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம்,காசநோய் நோயாளர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொண்ட நலப்பெட்டி மற்றும் கொசு புகை கருவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய சேர்மன் ரவி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர்,குமார்,மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் மகேந்திர வர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.