வெறுப்பு அரசியலை வேரறுப்போம்; பெண்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர்,மாணவர் சங்கம், தமுஎகச, பெண்கள் வழிகாட்டி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் செங்கல்பட்டு ராட்டினம் கிணறு பகுதியில் மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி. ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. மாதர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ். வாலண்டினா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் க. ஜீவானந்தம், மாணவர் சங்க மாவட்ட தலைவர் நரேஷ், தமுஎகச மாவட்ட தலைவர் இ. சங்கரதாஸ், பெண்கள் வழிகாட்டி இயக்க நிர்வாகி வசந்தா உள்ளிட்ட பலர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.