வேலூர், ஆக.16- நாட்டின் 78வது சுதந்திர தின விழாவையொட்டி விஐடி பல்கலைக்கழகத்தில் வேந்தர் டாக்டர் கோ.விசு வநாதன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி னார். அப்போது உரை யாற்றிய அவர், “நாட்டின் விடுதலைக்காக போராடி காந்தி, வ.உ.சி போன்ற தலைவர்களின் தியாகங் களை நாம் அனைவரும் நினைவு கூற வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “பொருளாதாரத்தில் உலக அளவில் நாம் முன் னேறி செல்ல வேண்டும். வறுமை ஒழிப்பு, அனை வரும் கல்வி பயில வேண்டும் மற்றும் நாட்டின் வளர்ச்சி அனைத்து மக்களையும் சென்றடைய ஒன்றிய, மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். விழாவில் துணைத் தலைவர் சங்கர் விசுவ நாதன், உதவி துணைத் தலை வர் காதம்பரி ச. விசுவநாதன் துணைவேந்தர், இணை துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், ஊழியர் கள் மற்றும் மாணவ, மாணவி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.