சென்னை,மார்ச் 31- திருமுல்லைவாயிலில் உள்ள விஜிஎன் ஸ்டப்ஃபோர்டு குடி யிருப்பு வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர்பாதிக்கப்படுவதாக குடியிருப்பு வாசிகளே புகார் தெரி வித்துள்ளனர். இந்த குடியிருப்பில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த குடியிருப்பின் கழிவுநீர் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக திரு மலைவாசன் நகரில் உள்ள சுதர்சன சாலையில் வெளியேற்றப்பட்டது. இதுகுறித்து ஆவடி நகராட்சி, திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டோரிடம் குடியிருப்புவாசிகள் சிலர் மனு அளித்து முறையிட்டனர். இதன் பின்னர் கடந்த டிசம்பர் முதல் காவலர் குடியிருப்பு வழியாக சாக்கடை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவலர் குடி யிருப்பு வளாக அதிகாரியாக உள்ள ஆவடி 3வது பட்டாலியன் தலைமை அதிகாரியிடம் மனு அளிக்கப்ட்டது. விஜிஎன் ஸ்டப்ஃபோர்டு குடி யிருப்பு வளாகம் 900 கே.எல்.டி கழிவு நீரை சுக்திகரிக்கும் திறன் கொண்டது. இருப்பினும் அதை முழுமை யாக பயன்படுத்தாமல் பெரும் பாலான சாக்கடை நீரை காவலர் குடி யிருப்பில் உள்ள கால்வாய் வழி யாக சுத்திகரிக்காமல் வெளி யேற்றப்படுகிறது. மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி ஒரு குடி யிருப்பில் இருந்து சாக்கடை நீரையோ அல்லது சுத்திகரிக்கப்படாத நீரையோ ஒரு துளிகூட பொதுவெளியில் வெளியேற்றக்கூடாது. இருப்பினும் குடி யிருப்பு நிர்வாகிகள் சட்டவிரோதமாக கழிவுநீரை வெளியேற்றி வருவதால் குடியிருப்பை சுற்றி நிலத்தடி நீர் மாசடைந்துவருவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இதுகுறித்து குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்கின்றனர் குடியிருப்பு வாசிகள். எனவே ஆவடி நகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் மாசுகட்டுப்பாட்டு வாரியமும் இதில் தலையிட்டு கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.