வேலூர். நவ.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலை வருமான தோழர் ப.சக்திவேல் உடல் சனிக்கிழமை (நவ.18) அகரம்சேரி இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவருமான பெ.சண்முகம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், எஸ்.டி சங்கரி, சிபிஎம் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ப.சுந்தரராசன், விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துளசி நாராயணன், அ.பாக்யம், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சி.சங்கர், திரு வள்ளூர் மாவட்டச் செயலாளர் கோபால், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் என்.காசிநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தா.வெங்கடேசன், டி.சந்திரன், எல்.சி.மணி, ஆர்.மணிகண்டன், பி.ரகுபதி, என்.ரமேஷ், ஏ.தவராஜ், ஏபிஎம் சீனி வாசன், செ.சரவணன் (ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி), திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், பிரகலநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலாளர் ப.செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரவிதாசன், குமரன், தவில் இசைக்கலைஞர் விநாயகம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ். தயாநிதி தலைமை தாங்கினார். மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், எம்.பி.ராமச்சந்திரன், கே.சாமிநாதன், பி.காத்தவராயன், செ.ஏகலைவன், எம்.இந்துமதி, கே.ஜெ.சீனிவாசன் இடைக்கமிட்டி செயலாளர்கள் கே.பாண்டுரங்கன், எஸ்.செல்வி, ஆர்.சுடரொளியன், சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், ஆர்.மணிமாறன், எம்.காசி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரங்கல் கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பேசியதாவது, தோழர் சக்திவேலின் இழப்பு மார்க்சிஸ்ட் கட்சிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாலிபர் சங்கம், விவசாயிகள் சங்கங்க ளில், கட்சியில் தனது முழுமையான அர்ப்பணிப்பான அவரது பணி போற்றத்தக்கது. அவரது குடும்பத்திற்கு கட்சி எப்பொழுதும் உறுதுணையாக நிற்கும் என்று கூறிய அவர் தோழர் சக்திவேல் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறினார். சிஐடியு அகில இந்திய துணைத்தலை வர் ஏ.கே.பத்மநாபன், கட்சியின் மூத்த தோழர் வே.மீனாட்சி சுந்தரம், புதுச்சேரி விவசாயிகள் சங்க மாநிலத் தலை வர் வே.சங்கர் ஆகியோர் சக்திவேல் மறைவுக்கு இரங்கல் செய்தி அனுப்பி யிருந்தனர்.