districts

img

தென்சென்னையில் தலைவர்கள் தீவிர பிரச்சாரம்

சென்னை, செப். 6 - தமிழ்நாடு முழுவதும் செப்.7 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்தை விளக்கி தென் சென்னை மாவட்டத்தில் பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சாரத்தை மேற்  கொண்டது. இதன் ஒரு பகுதி யாக தென் சென்னை மாவட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் துண்டு பிரசுரம் விநியோகித்தும், பிரச்சாரக் கூட்டங்கள் வாயிலாகவும் பிரச்சாரம் செய்தனர். விலைவாசி உயர்வு, வேலையின்மையின் தாக்கம், சமூக பாதுகாப் புடன் கூடிய வேலை பறிப்பு,  அத்தக்கூலி முறையில் முறைசாரா தொழிலாளர்கள் உருவாக்கும் ஆட்சி யாளர்களின் கொள்கை, சர்வதேச சந்தையில் பொருட்கள் விலை உயர்ந்தாலும், உள்ளூரில் ஏறும் விலைவாசி உயர்வு, அதை திசை திருப்ப மத வாத, வகுப்புவாத பிரச் சனைகளை எழுப்பும் ஒன்றிய அரசின் போக்கு  போன்றவற்றை விளக்கி தலைவர்களும், ஊழியர்க ளும் பேசினர். இந்தக் பிரச்சாரங்களில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர் கே.சுவாமி நாதன், மாவட்டச் செயலா ளர் ஆர். வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் க. பீம்ராவ், ஏ.பாக்கியம், கே.வனஜகுமாரி, சு. வெள் ளைச்சாமி, ச.லெனின், எஸ்.  குமார், பா. பாலகிருஷ்ணன், ஜி. செந்தில்குமார், ம. சித்ரகலா, சுந்தர் மற்றும் பகுதிச் செயலாளர்கள் தா. கிருஷ்ணா (தாம்பரம்), எம்.சி. பிரபாகரன் (பல்லா வரம்,) ந. வெங்கடேசன் (ஆலந்தூர்), ஜெயவேல் (சோழிங்கநல்லூர்), எஸ். முகமது ரஃபி (வேளச் சேரி), ஐ.ஆர். ரவி (மயிலாப் பூர்), இ. மூர்த்தி (தி.நகர்),  ஜி. வெங்கடேஷ் (சைதாப் பேட்டை), இ. ரவி (விருகம் பாக்கம்), வி. தாமஸ் (மதுர வாயல்)  உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.