districts

img

“மக்களுடன் முதல்வர்” திட்டம் துவக்கம்: அமைச்சர்கள் பங்கேற்பு

கடலூர், டிச.18- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசின் சேவை களை மக்களுக்கு விரைவாகச் சேர்த்திட “மக்களுடன் முதல்வர்” மற்றும் “இல்லம் தேடி அரசு சேவை” எனும் சிறப்பு திட்டங்களை திங்களன்று (டிச.18) கோவையில்  தொடங்கி வைத்தார்.  அதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். கடலூரை அடுத்த பாதிரிக் குப்பம் ஊராட்சியில் மக்களுடன் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமை தாங்கினார்.  வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தும் பொதுமக்கள் அதிகாரி களிடம் அளித்து வரும் மனுக்கள் பெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பொது மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.  இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன், சாராட்சியர் சரண்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராம் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம் அருகே அண்ணா மலை நகர் பேரூராட்சி யில் மன்ற தலைவர் பழனி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். இதில் வருவாய்த்துறை, காவல் துறை, கூட்டுறவு துறை, மருத்துவத்துறை,  உள்ளிட்ட 13 துறை அதிகாரிகள் ஊழியர்கள் தனித்தனி குழுவாக உள்ளனர். பொதுமக்கள் அவர்களின் குறைகளை மனுவாக எழுதி உரிய சான்றுடன் இக் குழுவிடம் கொடுத்து உடனடி யாக பிரச்சனையை சரி செய்து கொள்ள வேண்டும். இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் கண்காணிப்பு அலுவலர் பஞ்சாபிகேசன், பேரூ ராட்சி செயல் அலுவலர் பால முருகன், குமராட்சி திமுக கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை வாலாஜா பேட்டை, ஆற்காடு, அரக்கோணம் நகராட்சிகள், பனப்பாக்கம் பேரூ ராட்சி மற்றும் அரப்பாக்கம் பெரு நகர்புற ஊராட்சி ஆகிய பகுதி களில் 6 இடங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தலைமை தாங்கினார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்று ராணிப்பேட்டை நகராட்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வாலாஜாபேட்டை அம்சா துரைராஜ் மஹால், ஆற்காடு நகராட்சி இந்திராணி ஜானகிராமன் கல்யாண மண்டபம், அரப்பாக்கம் பெரிய நகர்ப்புற பஞ்சாயத்து ஏ.கே.ஜி மஹால் ஆகிய இடங்களில் நடைபெற்ற முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து பார்வை யிட்டார். ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி சந்தைப் பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தங்கம், திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் உமா மகேஸ்வரி, தனித் துணை ஆட்சி யர் ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.