districts

img

நியாயவிலைக் கடைகளில் மின்னணு பண பரிமாற்றம் துவக்கம்

கள்ளக்குறிச்சி, நவ.9- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு துறையின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து கூட்டுறவு சங்கங்கள், நியாய விலை கடைகள், கூட்டுறவு மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் அனைத்து விற்பனை நிலையங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் பண பரிவர்த்தனை செய்ய க்யூ. ஆர் கோடு வசதி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இம் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு துறையின் கீழ் முழு நேர நியாய விலை கடைகள் 598, பகுதி நேர நியாய விலை கடைகள் 168 என மொத்தம் 766 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கிராமப்புறங்களில் 691 கடைகளும் நகரப்பகுதிகளில் 75 நியாய விலை கடைகள் உள்ளன. குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பொது மக்களின் வசதிகளுக்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள், நியாய விலை கடைகள், கூட்டுறவு மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் அனைத்து விற்பனைகளும் மின்னணு பண பரிமாற்ற சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.